பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், படித்துறையில் நீர்வரத்து இல்லாததால் விழா வழக்கமான உற்சாகத்தை இழந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகம் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி ஏற்பாடு செய்தது.

கோவை: ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு, தர்ப்பண மண்டபத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்தை இழந்தது. இருப்பினும், ஐதீகத்தின்படி பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜைப் பொருட்களை படித்துறையில் முன்னோர்களுக்கு படைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.



மேலும், விழாவையொட்டி பக்தர்கள் பயன்படுத்தி சென்ற பூஜைப் பொருட்கள் மற்றும் கழிவுகளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனுக்குடன் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...