வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை கணுவாய் பகுதியில் டர்ஃப் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் செஞ்சுரியன்ஸ் கிரிக்கெட் அணி முதலிடம் பெற்றது.


Coimbatore: முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பின் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை கணுவாய் பகுதியில் டர்ஃப் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.

வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் கடந்த மாதம் போதை ஒழிப்பு மாதமாகவும், இந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமாகவும் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை கணுவாய் அருகே உள்ள எஸ் ஆர் டி டர்ஃப் மைதானத்தில் டர்ஃப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.


தொடக்க ஆட்டத்தை வீ த லீடர்ஸ் தன்னார்வலர் ஜேபி என்கிற ஜெயபிரகாஷ் துவக்கி வைத்தார். மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியை வீ த லீடர்ஸ் பாலாஜி உத்தம ராமசாமி வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தும், டாஸ் போட்டும் தொடங்கி வைத்தார்.


இப்போட்டிகளில் கோவை மாவட்டத்திலிருந்து 12 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் தலா ஆறு வீரர்கள் எனவும், ஒரு அணிக்கு 8 ஓவர்கள் என ஒதுக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.


முதலிடத்தை செஞ்சுரியன்ஸ் கிரிக்கெட் அணி பெற்று ₹8,000 ரொக்கப் பரிசு, பரிசுக் கோப்பை மற்றும் மெடல்களைப் பெற்றது. இரண்டாவது இடத்தை ஆக்டிவ் கிங்ஸ் அணி பெற்று ₹5,000 ரொக்கப்பரிசு, பரிசுக் கோப்பை மற்றும் மெடல்களைப் பெற்றது. குப்பநாயக்கன்பாளையம் கே என் சி சி அணி மூன்றாம் இடத்தையும், வரப்பாளையம் விசிசி கிரிக்கெட் அணி நான்காம் இடத்தையும் பெற்று பரிசுக் கோப்பை மற்றும் மெடல்களைப் பெற்றன.


பரிசளிப்பு விழாவில் வீ த லீடர்ஸ் அமைப்பின் பாலாஜி உத்தம ராமசாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டியில் சிறந்த ஆட்டக்காரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் மாதமாக கடைபிடிப்பதை முன்னிட்டு, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் மரக்கன்றுகள் மற்றும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் துணிப்பைகள் வழங்கப்பட்டன.


முன்னதாக சிறப்பு விருந்தினர் முன்னிலையில் சிறுமி சஹஸ்டிரா ஆதித்யா சிலம்பம் சுற்றி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் பரணிதரன் ஜி, ராஜ்குமார் ஜி, தினேஷ் குமார் ஜி, ஜெயக்குமார், பாலகுமார், ஆனந்தகுமார், ஹரி, உதயகுமார், பரணி சவுண்ட் சர்வீஸ் சுப்பிரமணி, தடாகம் கார்த்திகுமார், சுரேஷ்குமார், தேவேந்திரன், சீனிவாசன், கோபிநாத், செந்தில்குமார், குமரன், தம்புராஜ், டி எஸ் ஏ மோகன், ஜெய் கணேஷ், மகேஷ் குமார், அரவிந்த், கமல் நாத், விகாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை எஸ் ஆர் டி டர்ஃப் நிறுவனர் ஹேமந்த் குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...