வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானியம் திட்டத்தின்கீழ் ரூ.46 இலட்சம் செலவில் கட்டப்படும் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். உரம் தயாரிப்பு மையம், குப்பை தரம் பிரிக்கும் மையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானியம் (CFC) திட்டத்தின்கீழ் ரூ.46 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் ABC Centre (வீடில்லா நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம்) ஆய்வு செய்தார்.



இன்று (03.08.2026) நடைபெற்ற இந்த ஆய்வில், மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.99-க்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் செயல்பட்டுவரும் உரம் தயாரிக்கும் மையம், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் மையம், வாகன எடை மேடை ஆகியவற்றையும் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

வீடில்லா நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆணையர், பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 15வது மத்திய நிதிக்குழு மானியம் திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் இந்த மையம், வீடில்லா நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது.

இந்த ஆய்வில், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சந்தீப்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். வெள்ளலூர் வளாகத்தில் குப்பை மேலாண்மை மற்றும் விலங்கு நலன் சார்ந்த திட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...