வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானியம் திட்டத்தின்கீழ் ரூ.46 இலட்சம் செலவில் கட்டப்படும் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். உரம் தயாரிப்பு மையம், குப்பை தரம் பிரிக்கும் மையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானியம் (CFC) திட்டத்தின்கீழ் ரூ.46 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் ABC Centre (வீடில்லா நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம்) ஆய்வு செய்தார்.



இன்று (03.08.2026) நடைபெற்ற இந்த ஆய்வில், மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.99-க்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் செயல்பட்டுவரும் உரம் தயாரிக்கும் மையம், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் மையம், வாகன எடை மேடை ஆகியவற்றையும் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

வீடில்லா நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆணையர், பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 15வது மத்திய நிதிக்குழு மானியம் திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் இந்த மையம், வீடில்லா நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது.

இந்த ஆய்வில், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சந்தீப்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். வெள்ளலூர் வளாகத்தில் குப்பை மேலாண்மை மற்றும் விலங்கு நலன் சார்ந்த திட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...