கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பத்திரமாக மீட்டு மீண்டும் மற்ற குஞ்சுகளுடன் சேர்த்தனர். பெண் மயில் நான்கு குஞ்சுகளை பாதுகாத்து வருகிறது.
Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிடத்தின் வெளிப்புற ஜன்னல் மேல் இடுக்கில் பெண் மயில் ஒன்று நான்கு குஞ்சுகளை ஈன்று பாதுகாத்து வந்த நிலையில், இன்று ஒரு மயில் குஞ்சு தவறி ஜன்னல் ஸ்லாப்பில் விழுந்த சம்பவம் நடைபெற்றது.
பெண் மயிலும் குஞ்சை காப்பாற்ற முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பத்திரமாக மயில் குஞ்சை மீட்டு, மீண்டும் ஜன்னல் இடுக்கில் மற்ற குஞ்சுகளுடன் சேர்த்தனர்.
மீட்பு நடவடிக்கைக்கு பிறகு, பெண் மயில் BSNL அலுவலக மாடியில் சுற்றித் திரிந்தவாறு வேறு எந்த பறவையும் வராத வண்ணம் தனது குஞ்சுகளை பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்று தீயணைப்பு மீட்பு பணி துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கை காட்டுயிர் பாதுகாப்பில் தீயணைப்பு துறையினரின் விரைவான செயல்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
பெண் மயிலும் குஞ்சை காப்பாற்ற முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பத்திரமாக மயில் குஞ்சை மீட்டு, மீண்டும் ஜன்னல் இடுக்கில் மற்ற குஞ்சுகளுடன் சேர்த்தனர்.
மீட்பு நடவடிக்கைக்கு பிறகு, பெண் மயில் BSNL அலுவலக மாடியில் சுற்றித் திரிந்தவாறு வேறு எந்த பறவையும் வராத வண்ணம் தனது குஞ்சுகளை பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்று தீயணைப்பு மீட்பு பணி துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கை காட்டுயிர் பாதுகாப்பில் தீயணைப்பு துறையினரின் விரைவான செயல்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.