கோவை இருகூர் அருகே பேக்கரி கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

இருகூர் சிவசக்தி நகரில் பூட்டிய வீட்டில் தங்கம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிப்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இருகூர், சிவசத்தி நகரை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 39). இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 13 ஆம் தேதி, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது தாயின் இறுதி சடங்குக்கு புதுகோட்டை சென்றுள்ளார்.

அப்போது, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராமநாதனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து,. உடனே ராமநாதனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார். இதைகேட்ட ராமநாதன் உடனே ஊருக்கு திரும்பினார்.

வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த கம்மல், மோதிரம், தங்க காசு உள்பட 9 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி குத்து விளக்கு, குங்குமசிமில் உள்பட வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ராமநாதன் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதேபோன்று, போத்தனூர் சபரி நகர் 2 -வது வீதியில் கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்ற குடும்பத்தாரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

உடனே இதுகுறித்து அந்த குடும்பத்தாரின் உறவினர் ரோஷன் கோபால கிருஷ்ணன் அமெரிக்காவில் உள்ள குடும்பத்தாருக்க தகவல் தெரிவித்தார். பின்னர், போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...