'பிட் இந்தியா' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த குஜராத் முதல் கோவை வரை 1902 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்ட கோவை இன்ஜினியர்..!

உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டதாக கூறினார்.


கோவை: 'பிட் இந்தியா' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் குஜராத் முதல் கோவை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

தொண்டாமுத்தூர், கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சிவ சூர்யா (27). குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் 'பிட் இந்தியா' திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பசுமை இந்தியாவை உருவாக்க சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 1902 கி.மீ., தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

கடந்த ஜனவரி 1ம் தேதி குஜராத்தில் இருந்து புறப்பட்ட சூரியா, பல்வேறு மாநிலங்களைக் கடந்து 10 நாட்கள் தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு கோவை வந்தடைந்தார்.

மேலும் இதுகுறித்து சூர்யா கூறுகையில்,

"கடந்த நான்கு வருடங்களுக்கு முன், எனது தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்.

உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.

'பிட் இந்தியா' திட்டத்தை, பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பயணத்தை மேற்கொண்டேன். பசுமையான இந்தியாவை உருவாக்க, சைக்கிள் பயன்படுத்துவதற்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்" என்றார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...