'பிட் இந்தியா' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த குஜராத் முதல் கோவை வரை 1902 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்ட கோவை இன்ஜினியர்..!

உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டதாக கூறினார்.


கோவை: 'பிட் இந்தியா' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் குஜராத் முதல் கோவை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

தொண்டாமுத்தூர், கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சிவ சூர்யா (27). குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் 'பிட் இந்தியா' திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பசுமை இந்தியாவை உருவாக்க சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 1902 கி.மீ., தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

கடந்த ஜனவரி 1ம் தேதி குஜராத்தில் இருந்து புறப்பட்ட சூரியா, பல்வேறு மாநிலங்களைக் கடந்து 10 நாட்கள் தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு கோவை வந்தடைந்தார்.

மேலும் இதுகுறித்து சூர்யா கூறுகையில்,

"கடந்த நான்கு வருடங்களுக்கு முன், எனது தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்.

உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.

'பிட் இந்தியா' திட்டத்தை, பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பயணத்தை மேற்கொண்டேன். பசுமையான இந்தியாவை உருவாக்க, சைக்கிள் பயன்படுத்துவதற்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்" என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...