கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 12,76,426 பயணிகள் பயணம்..!

இதில், உள்நாட்டுத் துறையில் 12,24,492 பயணிகளும், சர்வதேசத் துறையில் 51,934 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 12,76,426 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையம் அதனை சுற்றியுள்ள 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் விமானப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. தொற்றுநோய் பரவலுக்கு முன்பு, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விமான நிலையத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்வர்.

இந்நிலையில், 'கோவிட்-19' தொற்றுநோய் பரவல் காரணமாக விமான சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை 12,76,426 பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதில், உள்நாட்டுத் துறையில் 12,24,492 பயணிகளும், சர்வதேசத் துறையில் 51,934 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையம் நல்ல வளர்ச்சியைக் காணத் தொடங்கியது. ஆனால் மீண்டும் 'கோவிட்-19' வைரஸ் மூன்றாவது அலை மற்றும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் விமான சேவைகள் மற்றும் பயணிகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, கடந்த நவம்பர் 2021ல் 1,47,276 மற்றும் டிசம்பர் 2021ல் 1,70,447 பயணிகள் உள்நாட்டுத் துறையில் விமான நிலையத்தைப் பயன்படுத்தினர். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் கோவை சர்வதேச விமான நிலையத்தில் அதிக பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...