குனியமுத்தூர் அருகே குடோனுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: குனியமுத்தூர் அருகே குடோனுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கோவைப்புதூர் மதுக்கரை குனியமுத்தூர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது. இந்த சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுத்தை அந்த பகுதிகளில் உள்ள கல்லூரிக்குள் புகுந்து நாயை அடித்துக் கொன்றது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்துக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைத்தும் சிறுத்தை இதுவரை பிடிபடவில்லை.
பி.கே. புதூர் பகுதியில் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒருவர் இன்று காலை திறப்பதற்காக வந்தார். உடனே திறந்தபோது உள்ளே இருந்த உறுமல் சத்தம் வந்த திசை பார்த்து பயந்துபோன அவர் ஏதோ விலங்கு இருக்கிறது என்பதை அறிந்தார்.
ஒருவேளை இந்த பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை தான் உள்ளே இழுக்கலாம் என்று நினைத்த அந்த நபர் உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது குடோனுக்குள் சிறுத்தை இருப்பது உறுதியானது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து குடோனில் இருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.