கொரோனா பரவல் காரணமாக, நேரடி விசாரணைக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால், ஆன்லைன் வாயிலாக வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
திருப்பூர்: திருப்பூரில் பாசி நிறுவனம் ரூ. 870 கோடி மோசடி செய்த வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு கோவை டான்பிட் நீதிமன்ற நீதிபதி ரவி ஒத்திவைத்தார்.
திருப்பூரில் செயல்பட்ட 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' (Paazee Forex Trading Firm) என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், 1,433 பேரிடம், 870 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. சாட்சி விசாரணை கடந்த நவம்பரில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதத்திற்கு வாய்தா போடப்பட்டு இருந்தது.
கொரோனா பரவல் காரணமாக, நேரடி விசாரணைக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால், ஆன்லைன் வாயிலாக வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வக்கீல் ஆகியோர், காணொலி வாயிலாக ஆஜரானார்கள். அப்போது, எதிர் தரப்பு வக்கீல், தனது வாதத்தை முன்வைக்க அவகாசம் கேட்டதால், விசாரணையை வரும் 20க்கு நீதிபதி ரவி ஒத்திவைத்தார்.
திருப்பூரில் செயல்பட்ட 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' (Paazee Forex Trading Firm) என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், 1,433 பேரிடம், 870 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. சாட்சி விசாரணை கடந்த நவம்பரில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதத்திற்கு வாய்தா போடப்பட்டு இருந்தது.
கொரோனா பரவல் காரணமாக, நேரடி விசாரணைக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால், ஆன்லைன் வாயிலாக வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வக்கீல் ஆகியோர், காணொலி வாயிலாக ஆஜரானார்கள். அப்போது, எதிர் தரப்பு வக்கீல், தனது வாதத்தை முன்வைக்க அவகாசம் கேட்டதால், விசாரணையை வரும் 20க்கு நீதிபதி ரவி ஒத்திவைத்தார்.