திருப்பூரில் பாசி நிறுவனம் ரூ. 870 கோடி மோசடி செய்த வழக்கு: விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

கொரோனா பரவல் காரணமாக, நேரடி விசாரணைக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால், ஆன்லைன் வாயிலாக வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.


திருப்பூர்: திருப்பூரில் பாசி நிறுவனம் ரூ. 870 கோடி மோசடி செய்த வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு கோவை டான்பிட் நீதிமன்ற நீதிபதி ரவி ஒத்திவைத்தார்.

திருப்பூரில் செயல்பட்ட 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' (Paazee Forex Trading Firm) என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், 1,433 பேரிடம், 870 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. சாட்சி விசாரணை கடந்த நவம்பரில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதத்திற்கு வாய்தா போடப்பட்டு இருந்தது.

கொரோனா பரவல் காரணமாக, நேரடி விசாரணைக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால், ஆன்லைன் வாயிலாக வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வக்கீல் ஆகியோர், காணொலி வாயிலாக ஆஜரானார்கள். அப்போது, எதிர் தரப்பு வக்கீல், தனது வாதத்தை முன்வைக்க அவகாசம் கேட்டதால், விசாரணையை வரும் 20க்கு நீதிபதி ரவி ஒத்திவைத்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...