கோவை - ஆலப்புழா பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட ரூ.3.5 கோடி 'ஹாசிஸ் ஆயில்' போதை பொருள் பறிமுதல் - கேரள சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவையிலிருந்து ஆலப்புழா செல்லும் (KSRTC) பேருந்தில் கஞ்சா கடத்தி செல்வதாக கேரள சுங்கதுறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாளையாறு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 11.3 கிலோ போதை பொருள் சிக்கியது.



கோவை: கோவையிலிருந்து ஆலப்புழா செல்லும் பேருந்தில் கொண்டு செல்லபட்ட அதீத போதை தரும் "ஹாசிஸ் ஆயில்" என்ற போதை பொருளை பறிமுதல் செய்து கேரள சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவையிலிருந்து ஆலப்புழா செல்லும் (KSRTC) பேருந்தில் கஞ்சா கடத்தி செல்வதாக கேரள சுங்கதுறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க துறை அதிகாரிகள் வாளையாறு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, பேருந்தில் தடைசெய்யபட்ட போது பொருளை கொண்டு சென்ற நபரை கையும் களவுமாக கேரள சுங்கத்துறையினர் வளைத்து பிடித்தனர்.



அந்த நபரிடம் இருந்து 11.3 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.3.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

விசாரணையில், போதை பொருளை கடத்திய நபர் கன்னியாகுமரியை சேர்ந்த விளவங்கோடு பகுதியை சேர்ந்த பிரமோத் (35) என்று தெரியவந்துள்ளது. பிடிபட்ட பிரமோதிடம் கேரள சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...