பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம்பர் 26, 2026-க்குள் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நகராட்சி, மாநகராட்சிகளிலும் விண்ணப்பித்து பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க விரும்புவோருக்கு செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் அறிவித்துள்ளார்.

பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-க்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இல்லாமல் உள்ளவர்கள், தங்களின் பெயரைச் சேர்த்துக் கொள்வதற்கான இறுதித் தேதி செப்டம்பர் 26, 2026 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகளின்படி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு அந்த பகுதிகளில் உள்ள தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் விண்ணப்பிக்க வேண்டும்.


குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பெயர் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பது அடையாள அட்டை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதற்கு அவசியமானது என்பதால், இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...