பஞ்சாப் சம்பவத்திற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் - கோவையில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்

பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பாஜக வினர் இன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


கோவை: பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பாஜக வினர் இன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கடந்த 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, பல்வேறு அமைப்பினர் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பிரதமரின் சுற்றுப்பயணம் ரத்து ஆனது. இச்சம்பவம், பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து, பாஜகவினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை கணுவாய் பகுதியில், பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், பஞ்சாப் மாநில அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தில், கண்டன உரையாற்றிய வேலூர் இப்ராஹிம், பிரதமர் நாட்டில் எங்கு செல்ல வேண்டுமானாலும் அவருக்கு அனுமதி உண்டு. அப்படி இருக்கையில், பஞ்சாபில் நடைபெற்றுள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது. இதற்கு பஞ்சாப் மாநில அரசு தான் காரணம்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு பாஜகவினர் எது செய்தாலும் அதற்கு வழக்குகள் போடுகிறது, என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...