கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 5-மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டலத்திற்கு ஒருவர்‌ வீதம்‌ 5-மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டலத்திற்கு ஒருவர்‌ வீதம்‌ 5-மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டலத்திற்கு ஒருவர்‌ வீதம்‌ 5-மாவட்ட வருவாய்‌

அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவல‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகள்‌ தொடர்பாக மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்கும்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டுள்ள மாவட்ட வருவாய்‌ அலுவலார்களுடான கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ காணொளி காட்சி (Video Conference) வாயிலாக இன்று 11.01.2022 நடைபெற்றது.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவித்ததாவது:-

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்கும்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டலத்திற்கு ஒருவர்‌ வீதம்‌ 5 மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள்‌.

வடக்கு மண்டலத்திற்குத் மீனாட்சி சுந்தரம்‌, தெற்கு மண்டலத்திற்கு மரு.செல்வசுரபி, கிழக்கு மண்டலத்திற்கு மரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்‌, மேற்கு மண்டலத்திற்கு மரு.மோ.ஷாமிளா, மத்திய மண்டலத்திற்கு கோவிந்தராஜீல்‌ ஆகியோர்‌ நியமனம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.

மாநகராட்சியின்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனைகள்‌, ஸ்கேன்‌ மையங்கள்‌, ஆய்வகங்கள்‌ உள்ளிட்ட இடங்களில்‌ கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்‌ நபர்கள்‌ தொடர்பான விபரங்கள்‌, தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களின்‌ விபரங்கள்‌ போன்ற தகவல்களைச் சேகரிக்க வேண்டும்‌. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள்‌ குறித்த தகவல்களை சம்மந்தப்பட்ட மண்டலங்களுக்குத் தெரியப்படுத்திட வேண்டும்‌.

மேலும்‌, 500 காய்ச்சல்‌ கண்டறியும்‌ முன் களப்பணியாளர்கள்‌, வீடுகளுக்கே சென்று கொரோனா சிகிச்சை அளிக்கும்‌ 5 சிறப்பு மருத்துவக்குழுக்கள்‌ மற்றும்‌ நாள்தோறும்‌ நடைபெறும்‌ சிறப்பு காய்ச்சல்‌ முகாம்கள்‌ உள்ளிட்ட தொடர்‌ நடவடிக்கைகளைக் கண்காணித்திட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா‌, உதவி நகர்‌ நல அலுவலர்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...