கோவையில் முழு ஊரடங்கில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது வழக்கு பதிவு

கோவை சிங்காநல்லூர், பீளமேடு, ஆகிய பகுதிகளில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் முழு ஊரடங்கில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பொது போக்குவரத்து மற்றும் கடைகள் திறக்க அனுமதி இல்லை. மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகள் மற்றும் செயல்பட்டனர். மேலும், ஊரடங்கு நாளில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் மருத்துவம் உள்ளிட்ட மிக அவசியத் தேவைகளை மட்டும் செல்லலாம். மீறினால் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவை மாநகரைப் பொறுத்தவரை நேற்று 47-சோதனைச் சாவடிகளில் சுமார் 700- போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளியே வருபவர்களிடம் காரணம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிலர் விதிமுறைகளை மீறி சாலைகளில் உலா வந்தனர். இதையடுத்து, கோவை சிங்காநல்லூர் பீளமேடு ஆகிய பகுதிகளில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...