கோவையில் குண்டும் குழியுமான சாலைக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி..! - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

மணியகாரம்பாளையம் முதல் நஞ்சே கவுண்டன்புதூர் வரை 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மிக மோசமான நிலையில் உள்ள சாலையை சீர் செய்ய கவன ஈர்ப்பு போராட்டம்.


கோவை: கோவையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலைக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் காந்திபுரம் பகுதியில் இருந்து துடியலூர் செல்லும் கனரக வாகனங்கள் கணபதி, மணியகாரம்பாளையம் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், மணியகாரம்பாளையம் முதல் நஞ்சே கவுண்டன்புதூர் வரை 5 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இந்த பழுதடைந்த சாலையை சீரமைத்து தர கோரி நஞ்சே கவுண்டன்புதூர் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், மாலை மற்றும் மலர் வளையங்களை, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, பழுடடைந்த சாலைக்கு மாலை அணிவித்தும் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், சாலையை உடனடியாக சீரமைத்து தர கோரி நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், பெண்கள் உட்பட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரும் விபத்துக்கள் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடிய, பழுதடைந்த சாலைக்கு இறுதி ஊர்வலம் நடத்திய சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...