சிறுமுகையில் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம் மத்திய அரசு அதிகாரி என மிரட்டி பணம் பறிக்க முயன்ற சாமியார் கைது.

மத்திய அரசு அதிகாரி என கூறியது, ,மத்திய அரசின் பெயரை தவறுதலாக பயன்படுத்தியது, மோசடி என மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே 

சிறுமுகையில் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம் மத்திய அரசு அதிகாரி என மிரட்டி பணம் பறிக்க முயன்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில் கிச்சகத்தியூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர்அதே பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இவர் சிறுமுகையில் உள்ள கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம் நீங்கள் போலி பட்டு சேலைகளை விற்பனை செய்கிறீர்கள்.நான் அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி, என கூறி மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜ்குமார் தனது காரில் மத்திய அரசு அதிகாரி என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில், சிறுமுகையில் உள்ள ஒரு தனியார் ஜவுளி பட்டு சேலை கடை வைத்துள்ள நாகராஜ் என்ற வியாபாரியிடம்

வந்துள்ளார்.அப்போது, தன்னை மத்திய அரசு அதிகாரி எனவும் கடைகளில் போலி பட்டு சேலைகளை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றுக் கூறி உரிய ஆவணங்களை கேட்டதுடன், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து, சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் அதன் தவைவர் நாகராஜ் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி கிச்சகத்தூரில் பதுங்கியிருந்த சாமியார் ராஜ்குமாரை கைது செய்தனர்.

அவர் மீது மத்திய அரசு அதிகாரி என கூறியது, ,மத்திய அரசின் பெயரை தவறுதலாக பயன்படுத்தியது,மோசடி செய்தது என மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...