கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை சிவதாஸ் மீனா ஐ ஏ.எஸ் நேரில் ஆய்வு; விரைந்து  முடிக்க உத்தரவு.

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரூம், நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான சிவதாஸ் மீனா ஐ. ஏ.எஸ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை சிவதாஸ் மீனா ஐ. ஏ.எஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் கழிவுநீர் சுத்திகாிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரூம் நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான சிவதாஸ் மீனாநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜனவரி 2020 இல், ரூபாய். 168 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சியின் சார்பாகநடைபெற்றுவரும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள், குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டத்தின் கீழ் மக்கும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், அங்கு தேங்கி உள்ள பழைய குப்பைகளை 68 ஏக்கர் நிலத்தை திட்டகாலத்திற்குள் மீட்டெடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஐஏஎஸ், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையாளர் ஷர்மிளா, நிர்வாக பொறியாளர் ராமசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செங்குட்டவன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் அண்ணாதுரை மாநகராட்சி நிர்வாக பொறியாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...