கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் காட்டு சாலை பகுதியில் வசித்து வரும் ஞானபிரகாஷின் மனைவி ரோகினி கடந்த 1 ஆம் தேதி தின்னரை ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்றச் சென்ற கணவர் ஞானப்பிரகாசம் காயமடைந்தார்.
இருவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி ரோகிணி உயிரிழந்தார்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பலத்த தீ காயத்துடன் இருந்த ரோகிணியிடம் மரணம் வாக்குமூலம் பெற்றதில் தனது பக்கத்துத் தோட்டத்தில் வசிக்கும் சக்தி சண்முகம் என்பவர் தன்னையும் தனது கணவரையும் கெட்டவார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் கிணத்துக்கடவு போலீசார் ரோகிணியை தற்கொலைக்குத் தூண்டியதாக தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சக்தி சண்முகம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் காட்டு சாலை பகுதியில் வசித்து வரும் ஞானபிரகாஷின் மனைவி ரோகினி கடந்த 1 ஆம் தேதி தின்னரை ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்றச் சென்ற கணவர் ஞானப்பிரகாசம் காயமடைந்தார்.
இருவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி ரோகிணி உயிரிழந்தார்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பலத்த தீ காயத்துடன் இருந்த ரோகிணியிடம் மரணம் வாக்குமூலம் பெற்றதில் தனது பக்கத்துத் தோட்டத்தில் வசிக்கும் சக்தி சண்முகம் என்பவர் தன்னையும் தனது கணவரையும் கெட்டவார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் கிணத்துக்கடவு போலீசார் ரோகிணியை தற்கொலைக்குத் தூண்டியதாக தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சக்தி சண்முகம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.