கிணத்துக்கடவில் பெண் தீக்குளித்து தற்கொலை வழக்கு- விவசாயி கைது

கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் காட்டு சாலை பகுதியில் வசித்து வரும் ஞானபிரகாஷின் மனைவி ரோகினி கடந்த 1 ஆம் தேதி தின்னரை ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்றச் சென்ற கணவர் ஞானப்பிரகாசம் காயமடைந்தார்.

இருவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி ரோகிணி உயிரிழந்தார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பலத்த தீ காயத்துடன் இருந்த ரோகிணியிடம் மரணம் வாக்குமூலம் பெற்றதில் தனது பக்கத்துத் தோட்டத்தில் வசிக்கும் சக்தி சண்முகம் என்பவர் தன்னையும் தனது கணவரையும் கெட்டவார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் கிணத்துக்கடவு போலீசார் ரோகிணியை தற்கொலைக்குத் தூண்டியதாக தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சக்தி சண்முகம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...