21 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் மினிடோர் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்திய இருவரையும் கைது செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, இன்று அதிகாலை தாமரைக்குளம் பகுதியில் இருந்து நெ.10 முத்தூர் வழியாக செல்லும் சாலையில் ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் அவ்வழியாக வந்த மினிடோர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலிபாறை பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (34), கொங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த சஜித் (27) ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் தாமரைக்குளம், நல்லட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரேசன் கடையில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கி கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, 21 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் மினிடோர் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்திய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, இன்று அதிகாலை தாமரைக்குளம் பகுதியில் இருந்து நெ.10 முத்தூர் வழியாக செல்லும் சாலையில் ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் அவ்வழியாக வந்த மினிடோர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலிபாறை பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் (34), கொங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த சஜித் (27) ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் தாமரைக்குளம், நல்லட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரேசன் கடையில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கி கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, 21 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் மினிடோர் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்திய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.