பொள்ளாச்சி அருகே குடும்பம் தகராறு காரணமாக மனைவி கண் முன்னே மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்த கணவன்..!!

உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பம் தகராறு காரணமாக மனைவி கண் முன்னே மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்த கணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வராஜ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு 13 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

இதனிடையே, கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடும்பம் நடத்த வருமாறு செல்வராஜ் அவ்வப்போது சுனிதாவிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை சுனிதா பணியாற்றும் சூளேஸ்வரன்பட்டி பகுதியில் உள்ள மிக்சர் தயாரிக்கும் கடைக்குச் சென்ற செல்வராஜ், மனைவியை வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது.

இதற்கு அவர் மறுக்கவே தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை மனைவி கண்முன்னே தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் அலறியபடி ஆட்டோவில் ஏறி ஏறியுள்ளார். இதனால் ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் செல்வராஜை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கிழக்கு காவல் நிலைய போலீசார் மனைவி சுனிதாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி கண் முன்னே கணவன் தீ குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...