கோவை கிணத்துக்கடவு அருகே தின்னரை உற்றி தீக்குளித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலி..!

இவரது கணவர் ஞானபிரகாசுக்கு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் தின்னரை ஊற்றி தீக்குளித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் காட்டுசாலை பகுதியில் வசித்து வந்தவர் ஞானபிரகாஷ், விவசாயியான இவருக்கு ரோகினி (40) என்ற மனைவியும், அவினாஷ் (16) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி காலை ரோகிணி மற்றும் கணவர் ஞானபிரகாசும் தனது தோட்டத்தில் பாத்திகட்டி கொண்டிருந்த போது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சக்திசண்முகம் என்பவர் ரோகிணியையும் அவரது கணவர் ஞானபிரகாஷையும் கெட்டவார்த்தையால்

திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரோகிணி வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த தின்னரை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனைக் கண்ட கணவர் ஞானபிரகாஷ், ரோகிணியை காப்பாற்ற முயன்றதில் ஞானபிரகாசும் காயம் அடைந்தார்.



இதனையடுத்து, இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ரோகிணியையும், ஞானபிரகாசும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை ரோகிணி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஞானபிரகாசுக்கு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...