கோவை கிணத்துக்கடவு அருகே தின்னரை உற்றி தீக்குளித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலி..!

இவரது கணவர் ஞானபிரகாசுக்கு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் தின்னரை ஊற்றி தீக்குளித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் காட்டுசாலை பகுதியில் வசித்து வந்தவர் ஞானபிரகாஷ், விவசாயியான இவருக்கு ரோகினி (40) என்ற மனைவியும், அவினாஷ் (16) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி காலை ரோகிணி மற்றும் கணவர் ஞானபிரகாசும் தனது தோட்டத்தில் பாத்திகட்டி கொண்டிருந்த போது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சக்திசண்முகம் என்பவர் ரோகிணியையும் அவரது கணவர் ஞானபிரகாஷையும் கெட்டவார்த்தையால்

திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரோகிணி வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த தின்னரை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனைக் கண்ட கணவர் ஞானபிரகாஷ், ரோகிணியை காப்பாற்ற முயன்றதில் ஞானபிரகாசும் காயம் அடைந்தார்.



இதனையடுத்து, இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ரோகிணியையும், ஞானபிரகாசும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை ரோகிணி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஞானபிரகாசுக்கு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...