கொரோனா சிகிச்சை மையத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள (COVID CARE CENTRE) கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. உடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா‌, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ (பொ) சரவணன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ இருந்தனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம்‌, 36-வது வார்டுக்குட்பட்ட பூங்கா நகர்‌, நேரு நகர்‌, செளபாக்கியா நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ வீடு வீடாகச்‌ சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட்‌ மருந்தைத் தொட்டிகளில்‌ ஊற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளை மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மேற்கொண்டனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா நோய்‌ பரவலைக் கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ கிழக்கு மண்டலம்‌ மசக்காளிபாளையம்‌ பகுதியில்‌ அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும்‌, முகக்கவசம்‌ அணியாமலும்‌ வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்களால்‌ அபராதம்‌ விதித்தனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...