தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால் இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் குறைந்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு வந்தது.
கோவை: தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால் இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் குறைந்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு வந்தது.

தென்னிந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் பொள்ளாச்சி மாட்டுச் சந்தை தமிழகத்தில் பாரம்பரிய மாட்டுச்சந்தையாகக் கருதப்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால் இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் குறைந்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு வந்தது.

குறிப்பாகக் கேரளாவிலிருந்து அதிக வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வியாபாரிகள் வரவில்லை என்றும் அதைப்போல் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்குக் கொண்டுவராத காரணத்தினாலும் மாடுகள் வரத்து குறைந்து உள்ளதாகவும், இதனால் இத்தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் வியாபாரிகள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக மாட்டு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வரும் காலங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாட்டுச்சந்தை நடத்த அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னிந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் பொள்ளாச்சி மாட்டுச் சந்தை தமிழகத்தில் பாரம்பரிய மாட்டுச்சந்தையாகக் கருதப்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால் இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் குறைந்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு வந்தது.
குறிப்பாகக் கேரளாவிலிருந்து அதிக வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வியாபாரிகள் வரவில்லை என்றும் அதைப்போல் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்குக் கொண்டுவராத காரணத்தினாலும் மாடுகள் வரத்து குறைந்து உள்ளதாகவும், இதனால் இத்தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் வியாபாரிகள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக மாட்டு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வரும் காலங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாட்டுச்சந்தை நடத்த அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.