திருப்பூரில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டம்..!

மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 21 கிலோ மீட்டர் சாலைக்கும் சேர்த்து சுங்க வசூல் என்பது முறைகேடு என்று போராட்டம் நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி விவசாய அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சியினர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.



திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் வேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சிறிய குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.



இந்த சுங்கச்சாவடி மையம் பராமரிக்கும் சாலை 32 கிலோ மீட்டர் எனும் நிலையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 21 கிலோ மீட்டர் சாலை அமைந்துள்ளது.



இந்த சாலைக்கும் சேர்த்து சுங்க வசூல் என்பது முறைகேடு எனவும், குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம், விவசாய அமைப்புகள், மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...