இவர் மீது கிழக்கு - மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை: பொள்ளாச்சி அருகே பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அனுமன் சேனா மாநிலச் செயலாளர் அனுராக் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி - அகில பாரத அனுமன் சேனா சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு கடந்த 30.12.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், இந்த செய்தியை ஏன் வெளியிடவில்லை என்று 31.12.2021 அன்று பொள்ளாச்சி தனியார் பத்திரிகை செய்தியாளர் மகேஷ் குமார் மற்றும் ஊடக செய்தியாளர்களை தொலைபேசியில் அழைத்து செய்தி வெளியிட வற்புறுத்தியும், செய்தி வெளியிடவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அனுராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில் அனுராக் மீது கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாச வார்த்தைகளால் திட்டியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவான அனுராக்கை போலீசார் தேடி வருகின்றனர்
இவர் மீது கிழக்கு - மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்து மக்கள் கட்சி - அகில பாரத அனுமன் சேனா சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு கடந்த 30.12.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், இந்த செய்தியை ஏன் வெளியிடவில்லை என்று 31.12.2021 அன்று பொள்ளாச்சி தனியார் பத்திரிகை செய்தியாளர் மகேஷ் குமார் மற்றும் ஊடக செய்தியாளர்களை தொலைபேசியில் அழைத்து செய்தி வெளியிட வற்புறுத்தியும், செய்தி வெளியிடவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அனுராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில் அனுராக் மீது கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாச வார்த்தைகளால் திட்டியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவான அனுராக்கை போலீசார் தேடி வருகின்றனர்
இவர் மீது கிழக்கு - மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.