பொள்ளாச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அனுமன் சேனா மாநிலச் செயலாளர் அனுராக் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு..!

இவர் மீது கிழக்கு - மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: பொள்ளாச்சி அருகே பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அனுமன் சேனா மாநிலச் செயலாளர் அனுராக் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி - அகில பாரத அனுமன் சேனா சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு கடந்த 30.12.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், இந்த செய்தியை ஏன் வெளியிடவில்லை என்று 31.12.2021 அன்று பொள்ளாச்சி தனியார் பத்திரிகை செய்தியாளர் மகேஷ் குமார் மற்றும் ஊடக செய்தியாளர்களை தொலைபேசியில் அழைத்து செய்தி வெளியிட வற்புறுத்தியும், செய்தி வெளியிடவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அனுராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.

இதன் அடிப்படையில் அனுராக் மீது கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாச வார்த்தைகளால் திட்டியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவான அனுராக்கை போலீசார் தேடி வருகின்றனர்

இவர் மீது கிழக்கு - மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...