பொள்ளாச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அனுமன் சேனா மாநிலச் செயலாளர் அனுராக் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு..!

இவர் மீது கிழக்கு - மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: பொள்ளாச்சி அருகே பத்திரிக்கையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அனுமன் சேனா மாநிலச் செயலாளர் அனுராக் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி - அகில பாரத அனுமன் சேனா சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு கடந்த 30.12.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், இந்த செய்தியை ஏன் வெளியிடவில்லை என்று 31.12.2021 அன்று பொள்ளாச்சி தனியார் பத்திரிகை செய்தியாளர் மகேஷ் குமார் மற்றும் ஊடக செய்தியாளர்களை தொலைபேசியில் அழைத்து செய்தி வெளியிட வற்புறுத்தியும், செய்தி வெளியிடவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அனுராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.

இதன் அடிப்படையில் அனுராக் மீது கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாச வார்த்தைகளால் திட்டியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவான அனுராக்கை போலீசார் தேடி வருகின்றனர்

இவர் மீது கிழக்கு - மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...