கோவையில் நடந்த இருவேறு திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் நடந்த இருவேறு திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கோவை சூலூர் மைலம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
இவர் கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் பூஜை அறையிலிருந்த வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பிரகாஷ் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதேபோன்று சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). பைனான்சியர். இவர் குடும்பத்துடன் திருப்பூர் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த ரூ.3 லட்சம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூர் மைலம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
இவர் கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் பூஜை அறையிலிருந்த வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பிரகாஷ் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதேபோன்று சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). பைனான்சியர். இவர் குடும்பத்துடன் திருப்பூர் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த ரூ.3 லட்சம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.