மீன்பாசி குத்தகை விடுவதில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை வட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்பட்டால் இந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 761 மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.


கோவை: தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மீன் பிடிக்கத் தகுதியான நீர்நிலைகளில் மீன்பாசி குத்தகை அளிப்பதில் தமிழகத்தில் உள்ள மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது.

கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை 17-11-1993-ல் வெளியிட்ட அரசாணை எண் 332-ன்படி மீன்பாசி குத்தகையில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசு நிர்ணயிக்கும் குத்தகைத் தொகையை செலுத்தி நீர்நிலைகளில் மீன்களை வளர்த்து விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 22-12-2021-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில், நீர் நிலைகளில் மீன்பாசி குத்தகையை பொது ஏலம் விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை குறித்து கோயமுத்தூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.பாலமுருகன், கோவை தெற்கு தொகுதியில் உள்ள மீனவ சமுதாய மக்கள், தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை வட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்பட்டால் இந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 761 மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

கொரோனா பொதுமுடக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்களை, மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்படும் என்பது மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எனவே, மீனவர்களின் நலன் கருதி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நீர்நிலைகளில் மீன்பாசி குத்தகை ஏலத்தில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழக்கம்போல முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு நல்ல தீர்வைக் காண வேண்டும், என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...