திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட மற்றும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது..!

நேற்று இரவு வாய் பேச முடியாத நபரிடம் ஹக்கீம் மற்றும் அப்துல் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டு, அவரை அடித்து பணத்தை பிடுங்கி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட மற்றும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயன்ற 7 பேரை திருப்பூர் வடக்கு காவல் நிலையம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் நேற்று இரவு தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் வாய் பேச முடியாத நபரிடம் ஹக்கீம் மற்றும் அப்துல் ஆகிய இரண்டு பேர் அவரை அடித்து பணத்தை பிடுங்கி உள்ளனர்.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் குற்றவாளிகள் இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அதேபோல, திருப்பூர் கல்லூரி சாலை ரயில்வே ட்ராக் முற்புதர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நபர்கள் புதரில் நீண்ட நேரம் மறைந்து இருப்பதை அறிந்த அப்பகுதியினர், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.



அந்த தகவலின் அடிப்படையில், கல்லூரி சாலை ரயில்வே ட்ராக் இருக்கும் பகுதிக்குச் சென்ற திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் அங்கிருந்த 5 பேரையும் பிடித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் கையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்ததைக் கண்டு அனைவரையும் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், சேக் முகமது (18), தீபன் (19), யாசர் அராபத் (23), அருண்குமார் (24), மணிகண்டன் (18) என தெரியவந்தது. இவர்கள் திருப்பூர் பகுதிகளில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முடிவு செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...