கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், சைபர் கிரைம் குற்றவாளியான நெய்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவரது மகன் இம்மானுவேல் ராஜன் (வயது-35) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் இமானுவேல் ராஜன்(வயது-35) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின் படி சைபர் கிரைம் குற்றவாளியான இமானுவேல் ராஜன்(வயது-35) என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், கோவை மாவட்டத்தில் தொடர் வீடு புகுந்து கொள்ளை வழக்கில் ஈடுபடுபவர்களை விரைந்து கண்டு பிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் கவியரசு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தொடர் வீடு புகுந்து கொள்ளை வழக்கில் ஈடுபட்ட சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் மாணிக்கராஜ்@ராஜ் (வயது-36) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5-பவுன் தங்க நகைகள், ரூபாய் 1,00,000/- மற்றும் Tap-1 பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதேபோல், பெரிய நாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் அடிதடி குற்ற வழக்கு குற்றவாளியான மதன கிருஷ்ணன் என்பவரின் மகன் சத்தியா@சத்திய நாராயணன் (வயது-47) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சத்தியா@சத்திய நாராயணன் (வயது-47) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின் படி தொடர் வழிப்பறி மற்றும் அடிதடி குற்ற வழக்கு குற்றவாளியான சத்தியா@சத்திய நாராயணன் (வயது-47) என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.