தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளைத் துவக்கி வைத்தார்.
கோவை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளைத் துவக்கி வைத்தார்.
தெற்கு மண்டலத்தில் வார்டு எண் 95, 85, 92, 99 ல்(மேற்கு தோட்டம், திருமறை நகர், பி.கே.புதூர் பிரதான சாலை, குப்பண்ணன் தோட்டம்) 187.2 லட்சம் மதிப்பில் தார் தளம் புதுப்பித்தல், கிழக்கு மண்டலத்தில் வார்டு எண் 75-ல் (நியூ போயஸ் கார்டன், ஆப்பிள் கார்டன்) 87.1-லட்சம் மதிப்பில் தார்தளம் புதுப்பித்தல், மேற்கு மண்டலத்தில் வார்டு எண் 14-ல் (புவனேஸ்வரி நகர்) 43.50-லட்சம் மதிப்பில் தார்தளம் புதுப்பித்தல் ஆகிய பணிகளைத் துவக்கி வைக்கிறார்.
திறப்பு நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 200-கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைத்தல் புதுப்பிக்கும் பணி முதல்வரின் ஆணைக்கிணங்க நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மின் கட்டணத்திற்கு GST-இல்லை. 2018-முதல் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களுக்கு மட்டும் தான் ஜி எஸ் டி வசூலிக்கப்படுகிறது.
அது தெரியாமல் தற்போது வசூலிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிக்கை விட்டுள்ளார். கோவையில் பல்வேறு பகுதிகள் கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் குப்பைத் தொட்டிகள் மட்டுமல்லாமல் குப்பை அள்ளும் வாகனங்களிலும் தவறு நடந்துள்ளது.
1-லட்சத்து 44-ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதுதான் சுவரொட்டி ஒட்டிய அதிமுகவின் 5-ஆண்டுகளாகச் சாதனையா? திமுகவின் இந்த 8-மாத காலத்தில் என்னென்ன செய்துள்ளோம் என்பது மக்களுக்குத் தெரியும் என கூறினார்.
இந்தத் தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.