ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கத்தை பொடியாக்கி ஆசன வாயில் மறைத்து கடத்தல் - 4 பேர் கைது..!

தொடர்ந்து அவர்களிடம், தங்கம் கடத்தி வரச் சொன்னது யார்? யாருக்காக கடத்தி வந்தீர்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.1.10 கோடி மதிப்புள்ள தங்கத்தை பொடியாக்கி மறைத்து கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வளைகுடா நாடான ஷார்ஜாவுக்கு மட்டுமே விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் இருந்து வரக் கூடிய விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி அதனை பறிமுதல் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, 4 வாலிபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் மீது சந்தேகம் வரவே 4 பேரையும் அங்குள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் செய்யது முகமது, நசருதீன் முகமது தம்பி, கலீஸ் ரகுமான் முஸ்தபா, தஸ்தகீர் காஜாமொகைதீன் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் தங்கத்தை பொடியாக்கி, ஆசன வாயில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் அவர்களது பேண்ட் பாக்கெட்டில் கை செயின், செயின் உள்ளிட்டவை இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அதனை உருக்கி பார்த்தபோது மொத்தம் 2.2 கிலோ தங்கத்தை 4 பேரும் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.1.10 கோடியாகும்.

இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த சகுபர் சாதிக் செய்யது முகமது, நசருதீன் முகமது தம்பி, கலீஸ் ரகுமான் முஸ்தபா, தஸ்தகீர் காஜாமொகைதீன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம், தங்கம் கடத்தி வர சொன்னது யார்? யாருக்காக கடத்தி வந்தீர்கள்? இங்குள்ள யாராவது கடத்தி வர சொன்னார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...