பொள்ளாச்சி அருகே கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 12,000 மதுபாட்டில்கள் அழிப்பு..!

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள இடத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் அழித்தனர்.



கோவை: பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 12,000 மதுபாட்டில்களை அழித்தனர்.



பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க வாகன சோதனை மற்றும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.



இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த மதுபாட்டில்கள், கர்நாடகா, கேரளாவில் இருந்து பொள்ளாச்சியில் கள்ளச்சந்தையில் விற்க கொண்டுவந்த மதுபாட்டில்கள் என ரூ.20 லட்சம் மதிப்பிலான 12,000 மதுபாட்டில்களை கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள இடத்தில் அமலாக்கத்துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், ஆய்வாளர் மீனா பிரியா மற்றும் போலீசார் அழித்தனர்.



இது குறித்து துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறுகையில், கோவை மாவட்டத்தில் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தமிழக கேரளா எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கலால் துறை அதிகாரி விஜயகுமார், உதவி ஆய்வாளர் சுரேந்தர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...