கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள இடத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் அழித்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 12,000 மதுபாட்டில்களை அழித்தனர்.
பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க வாகன சோதனை மற்றும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த மதுபாட்டில்கள், கர்நாடகா, கேரளாவில் இருந்து பொள்ளாச்சியில் கள்ளச்சந்தையில் விற்க கொண்டுவந்த மதுபாட்டில்கள் என ரூ.20 லட்சம் மதிப்பிலான 12,000 மதுபாட்டில்களை கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள இடத்தில் அமலாக்கத்துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், ஆய்வாளர் மீனா பிரியா மற்றும் போலீசார் அழித்தனர்.
இது குறித்து துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறுகையில், கோவை மாவட்டத்தில் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தமிழக கேரளா எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கலால் துறை அதிகாரி விஜயகுமார், உதவி ஆய்வாளர் சுரேந்தர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.