கோவை ஜவகர் சிறுவர் மன்ற பள்ளியில் சிறார்களுக்கு கட்டணமில்லா கலைப் பயிற்சிகள்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு கட்டமில்லா கலைப் பயிற்சிகள் மற்றும் விஜயதசமி அன்று சிறப்பு சேர்க்கைகள் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கோவை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர் சேர்க்கை தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் கலைகளை பயிலும் வண்ணம் கட்டணமில்லா பகுதி நேர கலைப் பயிற்சியினை அளித்து வருகிறது. கோவை ஜவகர் சிறுவர் மன்றம், மலுமிச்சம்பட்டியில் இசைக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.

இம்மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கீபோடு ஆகிய கலைகளில் சனிக்கிழமை மதியம் 3.30 முதல் 5.30 வரையிலும், ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இயப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.300 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

இம்மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெரும் சிறார்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும்.

தொடர்ந்து, செப்டம்பர் 30ம் தேதியன்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு சேர்க்கை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 97515 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...