வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது.


Coimbatore:

கோவையின் தென்கைலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது மே மாதம் பாதியை எட்டி உள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலரின் அறிவுரையின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து, மலைப் பாதைகளில் அதிக அளவு மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி நாளை மே 13-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்யத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாளை காலை முதல் மலையேற வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.

மலைப் பாதைகளில் மழைக் காலங்களில் வழுக்கும் தன்மையும், அபாயம் உள்ளதால், இந்தத் தடை உத்தரவை மீறி யாரும் மலை ஏற முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்து உள்ளது.

கோடைக்கால சீசன் முடிவுக்கு வந்து உள்ள நிலையில், வனத்துறையின் இந்த அறிவிப்பு ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிட்டு இருந்த பக்தர்கள் இடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவாகப் பார்க்கப்படுகிறது.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...