“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் வீட்டு உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஸ்டார் சுப்ரீம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் காலி மனையில் தொடர்ந்து மர்ம நபர்களால் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகளை எரிப்பதால் உருவாகும் கடுமையான நச்சுப் புகை இரவு நேரங்களில் முழுப் பகுதியையும் சூழ்ந்து கொள்வதாகவும், இதனால் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் அவதிப்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்டார் சுப்ரீம் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அவசர புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “தனியார் காலி மனையை சிலர் குப்பை கொட்டும் இ

க பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இப்பகுதியில் நடைபெறும் இந்தச் சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, குப்பை கொட்டி தீ வைப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...