சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆண்டுதோறும் 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தவும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூரில் பங்கேற்க வாய்ப்பு வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 12.05.2026 அன்று கல்லூரி வளாகத்தில் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் SNR Sons அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் Dr. Sundhar Ramakrishnan மற்றும் iGenius AI Private Limited இன் இயக்குநர் & முதன்மை கட்டமைப்பாளர் Kalirajan Panchalingam ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, iGenius AI Private Limited உடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தொழில், புதுமை மற்றும் உட்கட்டமைப்பு, தரமான கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 SDG Goals ஐ அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தங்களின் தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.


இந்த ஒப்பந்தத்தின் மூலம் 24 மணிநேர ஹேக்கத்தானில் தேர்வு செய்யப்படும் முதல் மூன்று அணிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் மற்றும் புதுமை போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் மற்றும் புதுமை போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பயணம், விசா மற்றும் பிற ஏற்பாடுகள் அனைத்தையும் iGenius நிறுவனம் மேற்கொள்ளும்.


சிறந்த திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், iGenius நிறுவனம் இலவச Microsoft இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளையும், நேரடி தொழில்துறை திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் வழங்கும். இது மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தையும், உலகளாவிய தொழில் வாய்ப்புகளையும் பெற உதவும்.


இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் Dr. P.L. Sivakumar, தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் N. Sumathi ஆகியோர் உடனிருந்தனர். இந்த கூட்டு முயற்சி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப திறன்களை வளர்க்கவும், சர்வதேச அளவில் போட்டியிடவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...