திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், இன்று இந்திரா நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பாக மாறியதாகவும், பின்னர் மேலும் சிலர் அந்த கும்பலில் இணைந்து ஜெகதீஷை சரமாரியாக தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஜெகதீஷுக்கு உதவ முன்வந்ததை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து 15 வேலம்பாளையம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை பிடித்து, மொத்தம் நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெகதீஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...