காய்கறிகளை மாலையாக அணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

உழவர் சந்தைகளில் நடைபெறும் முறைகேடுகளை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறி காய்கறிகளை மாலையாக அணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். மேலும், குறைபாடுகளை தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்தால், விவசாயிகள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாக்கபடுவதாக மனுவில் தெரிவிக்கபட்டிருந்தது. 



இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், விவசாயிகள் தேவைக்காக வைக்கபட்டுள்ள குளிர்பதன கிடங்கில் காய்கறி, பழங்களை பாதுகாக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். உழவர் சந்தையில் உள்ள காய்கறி கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்க அரசு தனி இடம் அளித்தும் உரங்கள் தயார்படுத்தாமல் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி குப்பை மேடாக காட்சி அளிக்கின்றனர். 



காய்கறி, பழங்களை பாதுகாக்க குளிர்பதன விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அதிகாரிகள் வருகை குறித்து கைரேகை பதிவு இயந்திரம் சரவர இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட உழவர் சந்தையில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...