கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தினார். மாவட்ட அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.


தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவையில் இன்று பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

முன்னதாக, நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள விளையாட்டு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை பார்வையிட்டார்.



அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், துறையின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.



கூட்டத்தில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்ற நிலையை அமைச்சர் ஆய்வு செய்து, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இதையடுத்து, திட்டங்கள் விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றப்படுவதற்கான தேவையான வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு வழங்கிய அமைச்சர், பணிகளை காலக்கெடுவிற்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மாவட்ட வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...