எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் இன்று (மே 10) பதவியேற்றுள்ள நிலையில், நாளை மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தனது பணியைத் தொடங்கவுள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. மேலும், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான மு.க.ஸ்டாலின், அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரங்களிலும் திமுக நிர்வாகிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் யார் பெயர் முன்மொழியப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தச் சூழலில், தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த மே 7ஆம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட உள்ளார்.

மேலும், சட்டமன்றக் குழு துணைத் தலைவராக கே.என்.நேரு மற்றும் கொறடாவாக எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...