எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் இன்று (மே 10) பதவியேற்றுள்ள நிலையில், நாளை மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தனது பணியைத் தொடங்கவுள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. மேலும், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான மு.க.ஸ்டாலின், அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரங்களிலும் திமுக நிர்வாகிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் யார் பெயர் முன்மொழியப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தச் சூழலில், தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த மே 7ஆம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட உள்ளார்.

மேலும், சட்டமன்றக் குழு துணைத் தலைவராக கே.என்.நேரு மற்றும் கொறடாவாக எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...