உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் பரப்புரை நடத்தியதாக, அதிமுக சார்பிலான வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.



தேர்தல் ஆணையம் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள வெங்கடகிருஷ்ணா சாலையில் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை கண்டித்து, உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தேர்தல் பொதுப் பார்வையாளர் ஸ்ரீ வத்சவாவிடம், திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆவின் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரன் தலைமையில் அதிமுக வழக்கறிஞர்கள் குழு புகார் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உடுமலை பகுதியில் பரப்புரை நடத்த ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்ட கோவை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிரச்சாரம் நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்தனர்.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக பரப்புரை மேற்கொள்ளும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடத்திலேயே பிரச்சாரம் நடத்தச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...