உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் பரப்புரை நடத்தியதாக, அதிமுக சார்பிலான வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.



தேர்தல் ஆணையம் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள வெங்கடகிருஷ்ணா சாலையில் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை கண்டித்து, உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தேர்தல் பொதுப் பார்வையாளர் ஸ்ரீ வத்சவாவிடம், திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆவின் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரன் தலைமையில் அதிமுக வழக்கறிஞர்கள் குழு புகார் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உடுமலை பகுதியில் பரப்புரை நடத்த ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்ட கோவை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிரச்சாரம் நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்தனர்.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக பரப்புரை மேற்கொள்ளும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடத்திலேயே பிரச்சாரம் நடத்தச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...