கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.


Coimbatore: கோவை மாநகர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ராமநாதபுரம் பகுதி வார்டு எண் 66 உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார்.








கொண்டசாமி லே-அவுட், புளியகுளம், அண்ணா நகர் 1வது வீதி, அண்ணா நகர் 2வது வீதி, அண்ணா நகர் 3வது வீதி, அம்மன் குளம் வடக்கு பகுதி, G.H. காலனி 1வது வீதி, G.H. காலனி 2வது வீதி, அம்மன் குளம் ரோடு AIRTEL ஆபிஸ் ரோடு, ராஜீவ் நகர், பழைய ஹவுசிங் யூனிட், எரிமேடு முதல் பகுதி, புது ஹவுசிங் யூனிட், எரிமேடு இரண்டாவது பகுதி மற்றும் பாலசுப்பிரமணியம் நகர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.






வாக்கு சேகரிப்பின்போது அம்மன் கே.அர்ஜுனன் பேசியதாவது: "நிர்வாகத் திறனற்ற Stalin தலைமையிலான DMK ஆட்சியில், கடந்த ஐந்தாண்டு காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம்போல் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது."






"மக்களின் இந்தச் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க இந்த நிதி உதவி பயன்படும்" என்று அவர் தெரிவித்தார்.






இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், அதிமுக ஆட்சி அமைந்தால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். வாக்கு சேகரிப்பில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருடன் இருந்தனர்.


Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...