கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.


Coimbatore: கோவை மாநகர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ராமநாதபுரம் பகுதி வார்டு எண் 66 உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார்.








கொண்டசாமி லே-அவுட், புளியகுளம், அண்ணா நகர் 1வது வீதி, அண்ணா நகர் 2வது வீதி, அண்ணா நகர் 3வது வீதி, அம்மன் குளம் வடக்கு பகுதி, G.H. காலனி 1வது வீதி, G.H. காலனி 2வது வீதி, அம்மன் குளம் ரோடு AIRTEL ஆபிஸ் ரோடு, ராஜீவ் நகர், பழைய ஹவுசிங் யூனிட், எரிமேடு முதல் பகுதி, புது ஹவுசிங் யூனிட், எரிமேடு இரண்டாவது பகுதி மற்றும் பாலசுப்பிரமணியம் நகர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.






வாக்கு சேகரிப்பின்போது அம்மன் கே.அர்ஜுனன் பேசியதாவது: "நிர்வாகத் திறனற்ற Stalin தலைமையிலான DMK ஆட்சியில், கடந்த ஐந்தாண்டு காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம்போல் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது."






"மக்களின் இந்தச் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க இந்த நிதி உதவி பயன்படும்" என்று அவர் தெரிவித்தார்.






இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், அதிமுக ஆட்சி அமைந்தால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். வாக்கு சேகரிப்பில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருடன் இருந்தனர்.


Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...