பொள்ளாச்சி அருகே கேரள சுற்றுலா வாகனம் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 13 பயணிகள்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை பகுதியில் கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாடு பெரும் உயிர்ச்சேதத்தை தவிர்த்தது.



கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 13 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காடு ஓட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர், குழந்தைகளுடன் சுற்றுலாவிற்காக பொள்ளாச்சி வந்துள்ளனர்.

இக்குழுவினர் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கேரளா செல்வதற்காக வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் பயணித்துள்ளனர். இந்த நேரத்தில், அவர்கள் பயணித்த வாகனத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.



இதனால் வாகனம் சாலையின் ஓரத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.



வாகனத்தின் பழுதை கவனித்த வாகன ஓட்டுனர் லாவகமாக வாகனத்தை கையாண்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எதிர்பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்த தகவல் அறிந்த உடன் அப்பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...