பொள்ளாச்சி அருகே கேரள சுற்றுலா வாகனம் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 13 பயணிகள்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை பகுதியில் கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாடு பெரும் உயிர்ச்சேதத்தை தவிர்த்தது.



கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 13 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காடு ஓட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர், குழந்தைகளுடன் சுற்றுலாவிற்காக பொள்ளாச்சி வந்துள்ளனர்.

இக்குழுவினர் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கேரளா செல்வதற்காக வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் பயணித்துள்ளனர். இந்த நேரத்தில், அவர்கள் பயணித்த வாகனத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.



இதனால் வாகனம் சாலையின் ஓரத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.



வாகனத்தின் பழுதை கவனித்த வாகன ஓட்டுனர் லாவகமாக வாகனத்தை கையாண்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எதிர்பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்த தகவல் அறிந்த உடன் அப்பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...