விஸ்வ ஹிந்து பரிஷத் மதுக்கரை பிரகண்ட கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுக்கரையில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் செட்டிபாளையம் ஜெபக்கூடம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் நடவடிக்கை கோரப்பட்டது.


Coimbatore: விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மதுக்கரை பிரகண்ட கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் பிரகண்ட தலைவர் C.V. பழனிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளர் முனைவர் சாரதா, அமர்நாத் சிவலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் C.N. பரமசிவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முதல் தீர்மானத்தில், திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதத்தில் மாமிசக் கொழுப்பு கலந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது தீர்மானத்தில், கோவை செட்டிபாளையம் ஜெயம் நகரில் அனுமதியின்றி செயல்படும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் மீது மாநில அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.



கூட்டத்தின் நிறைவில், பிரகண்ட செயலாளர் ராஜேஷ்குமார் மகிழ்வுரையாற்றினார். இக்கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...