விஸ்வ ஹிந்து பரிஷத் மதுக்கரை பிரகண்ட கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுக்கரையில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் செட்டிபாளையம் ஜெபக்கூடம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் நடவடிக்கை கோரப்பட்டது.


Coimbatore: விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மதுக்கரை பிரகண்ட கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் பிரகண்ட தலைவர் C.V. பழனிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளர் முனைவர் சாரதா, அமர்நாத் சிவலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் C.N. பரமசிவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முதல் தீர்மானத்தில், திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதத்தில் மாமிசக் கொழுப்பு கலந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது தீர்மானத்தில், கோவை செட்டிபாளையம் ஜெயம் நகரில் அனுமதியின்றி செயல்படும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் மீது மாநில அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.



கூட்டத்தின் நிறைவில், பிரகண்ட செயலாளர் ராஜேஷ்குமார் மகிழ்வுரையாற்றினார். இக்கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...